Jeremiah 50:7 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லோரும் அவர்களைத் தாக்கினார்கள்; அவர்களுடைய எதிரிகள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதி தங்குமிடத்தில் யெகோவாவுக்கு விரோதமாக, தங்கள் முற்பிதாக்கள் நம்பின யெகோவாவுக்கு விரோதமாகவே, பாவம் செய்தார்கள் என்றார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் அவர்களை விழுங்கிப் போட்டார்கள். அவர்களுடைய பகைவர்களோ, ‘நாங்கள் குற்றமற்றவர்கள்; ஏனெனில் அவர்கள் தங்கள் உண்மையான மேய்ச்சலிடமான யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். தங்கள் முற்பிதாக்கள் நம்பியிருந்த யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்தார்கள்’ என்றார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லோரும் அவர்களைத் தாக்கினார்கள்; அவர்களுடைய எதிரிகள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதி தங்குமிடத்தில் கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் முற்பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே, பாவம் செய்தார்கள் என்றார்கள்.
Tamil Bible Romanised 2017
avarga'laik ka'ndupidiththavarga'l ellaarum avarga'laip padchiththaarga'l; avarga'ludaiya saththurukka'l: engga'lmeal kut'ramillai; avarga'l neethiyin vaasasthalaththilea karththarukku viroathamaaga, thangga'l pithaakka'l nambina karththarukku viroathamaagavea, paavagnseythaarga'l en'raarga'l.
Tamil OV
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே, பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எவர்கள் என் ஜனங்களைக் கண்டார்களோ அவர்களை காயப்படுத்தினார்கள். அப்பகைவர்கள் ‘நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை’ என்று சொன்னார்கள். ‘அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். கர்த்தர் தாமே அவர்களுடைய உண்மையான இளைப்பாறும் இடம். கர்த்தர் தாமே அவர்களது முற்பிதாக்கள் நம்பின தேவன்.’