Lamentations 2:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மக்களின் இருதயங்கள் ஆண்டவரை நோக்கிக் கதறுகின்றன. சீயோன் மகளின் மதிலே, உனது கண்ணீர் இரவும் பகலும் ஒரு நதியைப்போல் ஓடட்டும்; உனக்கு ஓய்வு கொடாதே, கண்ணீர்விடாமல் இருக்காதே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே.
Tamil Bible Romanised 2017
avarga'l iruthayam aa'ndavarai noakkik kooppidugi'rathu; seeyoan kumaaraththiyin mathilea, iravum pagalum nathiyavva'lavu ka'n'neer vidu, oaynthiraathea, un ka'n'nin ka'ruppuvizhi summaayirukkavottaathea.
Tamil OV
அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழியை சும்மாயிருக்கவொட்டாதே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தரிடம் உனது இதயத்தை ஊற்றி கதறு! சீயோன் குமாரத்தியின் சுவரே, ஒரு நதியைப்போன்று கண்ணீர்விடு! இரவும் பகலும் உன் கண்ணீரை வடியவிடு! நிறுத்தாதே! உனது கண்ணின் கறுப்பு விழி சும்மா இருக்கும்படிச் செய்யாதே!