Romans 10:20 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன், என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்” என்று தைரியத்தோடு சொல்லுகிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏசாயா இன்னும் துணிச்சலுடன் சொல்கிறார், “என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். என்னைப்பற்றி விசாரிக்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன் என்கிறார்.”
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். என்னைப் பற்றிக் கேட்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன்” என இறைவன் சொன்னதை ஏசாயா துணிவுடன் சொல்கின்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன், என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன் என்று தைரியத்தோடு சொல்லுகிறான்.
Tamil Bible Romanised 2017
allaamalum easaayaa: ennaith theadaathavarga'laalea ka'nda'riyappattean, ennai visaariththuk kea'laathavarga'lukku ve'liyaranggamaanean en'ru thairiyangko'ndu sollugi'raan.
Tamil OV
அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏசாயாவும் தைரியத்தோடு தேவனுக்காக இதைச் சொன்னார். “என்னைத் தேடியலையாத மக்களால் கண்டு பிடிக்கப்பட்டேன். என்னை விசாரித்து வராதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்.