Romans 14:23 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், யாராவது தான் சாப்பிடுவதைக்குறித்து அது சரியென்று விசுவாசம் இல்லாதிருந்தால், அவன் தன்னைத்தானே குற்றப்படுத்துகிறான். ஏனெனில் அவன் அதைச் சாப்பிடும்போது விசுவாச வாழ்வின் அடிப்படையில் சாப்பிடவில்லை; விசுவாசத்திலிருந்து வராததெல்லாம் பாவமே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆனால் யாரேனும் ஒருவன் தான் உண்ணுவதைக் குறித்து அது சரியா தவறா என்ற சந்தேகத்தோடு அதை உண்பானானால், அவன் தன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்கின்றவனாய் இருப்பான். ஏனெனில் அவன் அதை விசுவாசத்தோடு உண்ணவில்லை. விசுவாசம் இல்லாமல் செய்யப்படுகின்ற எல்லாம் பாவமே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே.
Tamil Bible Romanised 2017
oruvan samusayappadugi'ravanaayp pusiththaal, avan visuvaasamillaamal pusikki'rapadiyinaal, aakkinaikku'l'laagath theerkkappadugi'raan. visuvaasaththinaalea varaatha yaavum paavamea.
Tamil OV
ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சரியானதுதான் என்ற நிச்சயமில்லாமல் ஒருவன் ஒரு உணவை உண்பானேயானால் அவன் தனக்குத் தானே தப்பானவனாகிறான். ஏனென்றால் அவனுக்கு அவனது செயலில் நம்பிக்கை இல்லை. எனவே நம்பிக்கை இல்லாமல் செய்யும் எச்செயலும் பாவமானதே.